பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல்


பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல்
x

விழுப்புரத்தில் மொபைல் ஆப் மூலம் கடன் வாங்கிய பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் ஆப் மூலம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை தவணை முறையில் முழுமையாக செலுத்திவிட்ட போதிலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக்கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த மர்ம நபர்கள், அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் அந்த பெண், வேறு வழியின்றி ரூ.3 லட்சம் வரை மொபைல் ஆப் நிறுவனத்திற்கு செலுத்திவிட்டபோதிலும் மேலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக்கேட்டு அவருக்கு மிரட்டல் வந்துள்ளது.

பெண்ணை ஆபாசமாக சித்தரிப்பு

இதனிடையே கேட்ட தொகையை கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், அப்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரின் செல்போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இச்சம்பவம் குறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story