போதையில் மின் ஒயரில் கைவைத்த தொழிலாளி சாவு


போதையில் மின் ஒயரில் கைவைத்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போதையில் மின் ஒயரில் கைவைத்த தொழிலாளி சாவு

கோயம்புத்தூர்

கோவை

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 30). கூலி தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்வதில்லை. சம்பவத்தன்று இவர், மனைவி ரேவதியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அவர், வெளியே சென்று விட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர், வீட்டில் மின்ஒயரில் கை வைத்துள்ளார். இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் உடல் கருகினார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story