நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு


நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு
x

நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து திடீரென ஆய்வு செய்தார். அப்போது பதிவேடுகளை ஆய்வு செய்து, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பிறகு நோயாளிகளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா?, இன்னூயிர் காப்போம் திட்டம் சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது மருத்துவமனைக்கு வந்த பள்ளி மாணவியிடம் உடல் நலம் விசாரித்து காலதாமதம் இல்லாமல் சிகிச்சை அளித்து விரைவில் பள்ளி அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் கார்த்திகேயன், சாந்தினி, சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story