முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டம்


முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டம்
x

ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டம் வேலூரில் நாளை நடக்கிறது.

வேலூர்

தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2½ கோடி வரை நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கையின்படி குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் (மினி டெக்ஸ்டைல் பார்க்) அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தினை வேலூர் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்வதற்கு ஏதுவாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தகவலை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story