இரும்பு தகடு திருடியவர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் இரும்பு தகடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் சப்பாணி அலிம் தெருவில் சென்ட்ரிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் (வயது 26) என்பவருக்கு சொந்தமான இரும்பு தகடுகள் கடந்த 13-ந் தேதி காணாமல் போனதாக அவர் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மேலப்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (40) என்பவர் திருடியது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 9 இரும்பு தகடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





