பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை: தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் மீது தாக்குதல்: தாய்-மகன் கைது


பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை:  தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் மீது தாக்குதல்:  தாய்-மகன் கைது
x

தேனியில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்திய தாய்- மகனை போலீசார் கைது செய்தனர்

தேனி

தேனி கம்போஸ்ட் ஓடைத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். இவருக்கும் கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த வனிதா (51) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகன் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறம் வழியாக தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது வனிதா மற்றும் அவருடைய மகன் பரசுராமன் (33) ஆகிய இருவரும் அவரை வழி மறித்து தகராறு செய்து தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதா, பரசுராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story