நெல்லை அருகே துணிகரம்: ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகள் கொள்ளை


நெல்லை அருகே துணிகரம்:  ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில்  46½ பவுன் நகைகள் கொள்ளை
x

நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊழியர்

நெல்லை பாளையங்கோட்டை அருகே மேலூர் கீழநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சட்டநாதன். இவருடைய மகன் நம்பி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்த நம்பி தனது வீட்டில் இருந்தே கணினி மூலம் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

கொள்ளை

கடந்த மாதம் 31-ந்தேதி அப்பகுதியில் நடந்த திருமண விழாவில் நம்பி குடும்பத்தினருடன் பங்கேற்றார். பின்னர் அவர் தனது மனைவி, குழந்தைகளின் நகைளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டினார். எனினும் சாவியை பீரோவின் மேலேயே வைத்து இருந்தார்.

சில நாட்களுக்கு பிறகு நம்பி பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 46½ பவுன் நகைகள் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவத்தன்று நம்பியின் வீட்டில் நைசாக புகுந்த மர்மநபர்கள், பீரோவை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இ்ந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story