ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி


ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி
x

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வாழ்வாதார உரிமை மீட்புக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோ தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள்- முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உச்சிபிள்ளையார் கோவில் முதல் தலைமை தபால் அலுவலகம் வரை மனித சங்கிலி அமைத்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story