கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சிறை-கலெக்டர் எச்சரிக்கை


கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சிறை-கலெக்டர் எச்சரிக்கை
x

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

11 வகை ரகங்கள்

மத்திய அரசால் 1985-ம் ஆண்டு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டு, 1998-ம் ஆண்டு முதல் 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தறி துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சென்னையை தலைமை இடமாக கொண்டு ஈரோடு, சேலம், திருச்செங்கோடு, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கைத்தறிக்கென்று கரை பாவுபேட்டு டிசைனுடைன் கூடிய காட்டன் வேட்டி ரகம், பாவு பேட்டு, ஊடை பேட்டு, புட்டா மற்றும் பட்டு சேலை ரகம், கரை மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், லுங்கி, பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள், கம்பளி, சால்வை, உல்லன்ட்வீட் மற்றும் சத்தார்க் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

bஇந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை மீறிய செயலாகும். இது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்று அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வின்போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளருக்கு அதிகபட்சமாக 6 மாத கால சிறை தண்டனை விசைத்தறிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தே தண்டனையாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story