திருட்டு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை

திருட்டு வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருக்குறுங்குடியை சேர்ந்த அருண்குமார் (வயது 24) மற்றும் வள்ளியூரை சேர்ந்த மதன் (26) ஆகியோர் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அருண்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மதனுக்கு 48 நாட்கள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





