அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நாளை மறுநாள் தொடங்குகிறது


அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நாளை மறுநாள் தொடங்குகிறது
x

அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நாளை மறுநாள் தொடங்குகிறது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும், நாளை மறுநாள்(புதன்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி மாவட்ட கலெக்டர் தலைமையில் ஸ்ரீரங்கம் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தொட்டியம் வட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் திருச்சி (கிழக்கு) வட்டத்திலும், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மணப்பாறை வட்டத்திலும், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மண்ணச்சநல்லூர் வட்டத்திலும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் துறையூர் வட்டத்திலும், திருச்சி தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் முசிறி வட்டத்திலும், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் திருச்சி (மேற்கு) வட்டத்திலும், திருச்சி உதவி ஆணையர் (கலால்) தலைமையில் மருங்காபுரி வட்டத்திலும், திருச்சி தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையில் திருவெறும்பூர் வட்டத்திலும், மண்டல தனித்துணை ஆட்சியர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் கொட்டப்பட்டு திருச்சி தலைமையில் லால்குடி வட்டத்திலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story