வியாபாரி வீட்டில் நகை மாயம்; போலீசார் விசாரணை

வியாபாரி வீட்டில் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளை கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), பால் வியாபாரி. இவருடைய உறவினர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் இருமுடிகட்டும் விழாவிற்கு செல்வதற்காக பீரோவை திறந்தபோது அங்கு வைத்து இருந்த 10½ பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் கை சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





