வீட்டில் நகை-பணம் திருட்டு


வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி வடக்கு புதுமனை தெருவைச் சேர்ந்தவர் அகமது மீரான் மனைவி அசன்பாத்து (வயது 75). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி சாவியை கதவின் மேலே வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்கு சென்றாா். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் 5 கிராம் தங்க மோதிரத்தை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story