பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

திருப்பரங்குன்றம் அருகே சாமி கும்பிட ெசன்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர் அழகம்மாள். (வயது 45) இவர் திருப்பரங்குன்றம் வெயிலு உகந்த அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஜி.எஸ்.டி. ரோட்டில் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் அழகம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பினார். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story