பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

பெண்ணிடம் நகை பறிப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவை பி.என்.புதூர் கோகுலம் காலனி 4-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மனைவி வானதி (54). இவர் நேற்று ஜவுளி வாங்குவதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி ரோடு வெங்கிடசாமி ரோட்டில் உள்ள துணிக்கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென வானதியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க நகையை பறித்தனர். அதிர்ச்சியடைந்த வானதி கூச்சல் போட்டார்.

அங்கிருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் நகையுடன் தப்பி சென்றனர். இது குறித்து வானதி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story