நகை தொழிலாளியின் கார் தீ வைத்து எரிப்பு

விழுப்புரத்தில் நகை தொழிலாளியின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம்;
விழுப்புரம் அருகே உள்ள சானாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் மகன் குமாரசாமி (வயது 39). இவர் விழுப்புரத்தில் நகை தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு இவர் தன்னுடைய காரை, வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த காரின் 4 டயர்களிலும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமாரசாமி, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இருப்பினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து குமாரசாமி அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? என்றும் ஏதேனும் முன்விரோதம் காரணமாக தீ வைத்தனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






