நகைக்கடையில் கொள்ளை


நகைக்கடையில் கொள்ளை
x

வள்ளியூர் நகைக்கடையில் தங்கமுலாம் பூசிய விநாயகர் சிலை கொள்ளை

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 62). இவர் வள்ளியூர் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டிச் சென்றார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், நகைக்கடையின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து கடையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனாலும் அதனை உடைக்க முடியவில்லை. இதனால் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

இதையடுத்து நகைக்கடையில் இருந்த தங்கமுலாம் பூசிய விநாயகர் சிலையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று காலையில் மகாராஜன் தனது நகைக்கடைக்கு சென்றபோது, அங்கு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், கடையில் இருந்த விநாயகர் சிலை கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைக்கடையில் பூட்டை உடைத்து தங்கமுலாம் பூசிய விநாயகர் சிலையை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story