பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x

தாடிக்கொம்பு அருகே பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 57). இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடன் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தாடிக்கொம்பை அடுத்த தனியார் நூற்பாலை அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது, பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story