தனியார் நிறுவன ஊழியரிடம் நகை-பணம் பறிப்பு


தனியார் நிறுவன ஊழியரிடம் நகை-பணம் பறிப்பு
x

தனியார் நிறுவன ஊழியரிடம் நகை-பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி நகரை சேர்ந்தவர் சைமன் ராபர்ட் (வயது 53). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு நெல்லை- திருச்செந்தூர் சாலையில் வேளாங்கண்ணி கார்டன் டாஸ்மாக் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் சைமன் ராபர்ட்டை மிரட்டி அவர் அணிந்து இருந்த 2 தங்க மோதிரங்கள், வெள்ளிக்கொடி மற்றும் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சைமன் ராபர்ட் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story