ஆசிரியை வீட்டில் நகை திருட்டு

கோவையில் ஆசிரியை வீட்டில் நகை திருட்டு போனது.
போத்தனூர்
கோவை போத்தனூர் கார்மெல் நகரை சேர்ந்தவர் கணிகை மேரி (வயது 52). தனியார் பள்ளி ஆசிரியை. இவர் கடந்த 27-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சொந்தஊராக தூத்துக்குடிக்கு சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 1½ பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்து. இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





