சேலம் கந்தம்பட்டி அருகேநிதி நிறுவன அதிபர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு


சேலம் கந்தம்பட்டி அருகேநிதி நிறுவன அதிபர் வீட்டில்  10 பவுன் நகைகள் திருட்டு
x
சேலம்

அன்னதானப்பட்டி

சேலம் கந்தம்பட்டி அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவன அதிபர்

சேலம் கந்தம்பட்டி பைபாஸ், மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்காரன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 35). நிதி நிறுவன அதிபர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். நேற்று செல்வகுமார் வேலை விஷயமாக வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து, வீட்டில் இருந்தவர்கள் நகைகளை சரிபார்த்தனர். அப்போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நகை மாயமானது குறித்து செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இருக்கும்போதே நகைகள் எப்படி திருட்டு போனது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story