சிறுமி பலாத்கார வழக்கில்கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பலாத்கார வழக்கில்கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனைதர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 10 March 2023 7:00 PM GMT (Updated: 10 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

சிறுமி பலாத்கார வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுமி பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

7 ஆண்டு சிறை

இதை தொடர்ந்து போக்சோ பிரிவின் கீழ் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் ஞானவேல் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதையடுத்து ஞானவேலுக்கு 7 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி சையத் பர்க்கத்துல்லா நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜராகி வாதாடினார்.


Next Story