6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Jun 2023 7:00 PM GMT (Updated: 22 Jun 2023 7:40 AM GMT)
கிருஷ்ணகிரி

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரியை அடுத்த நெடுமருதி வீரோஜிப்பள்ளியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56). தொழிலாளி. இவர் கடந்த 10.2.2021 அன்று 6 வயது சிறுமியை விளையாட அழைத்து செல்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

7 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட கண்ணனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story