மாணவர்களுக்கான ஜூனியர் தடகள போட்டிகள்

மாணவர்களுக்கான ஜூனியர் தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு ஜூனியர் தடகளப் போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இந்த தடகள போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 336 மாணவர்கள், 173 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமர மணிமாறன், மாவட்ட தடகளசங்க செயலாளர் சிவராஜ், பொருளாளர் விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





