கலவைபுத்தூர் ஏரி நிரம்பியது

தொடர் மழையால் கலவைபுத்தூர் ஏரி நிரம்பியது.
திமிரி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பல்வேறு ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
அதன்படி கலவைபுத்தூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதன்மூலம் கலவை - கலவைபுத்தூர் சுற்றியுள்ள வேம்பி, பென்னகர், தோணிமேடு, பாலி, பின்னந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடையும்.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





