கள்ளழகர் கோவில் உண்டியல் திறப்பு - ரூ.50 லட்சம் பக்தர்கள் காணிக்கை


கள்ளழகர் கோவில் உண்டியல் திறப்பு - ரூ.50 லட்சம் பக்தர்கள் காணிக்கை
x

கள்ளழகர் கோவில் உண்டியல் திறப்பு - ரூ.50 லட்சம் பக்தர்கள் காணிக்கை

மதுரை

அழகர்கோவில்,


அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.50 லட்சத்து 37 ஆயிரத்து 63, தங்கம் 35 கிராம், வெள்ளி 212 கிராம் மற்றும் வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.

உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதீபா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story