கள்ளக்குறிச்சி, தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது


கள்ளக்குறிச்சி, தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது
x

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கள்ளக்குறிச்சி,

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை நூற்றுக்கணக்கானோரை பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பொருட்களை எடுத்து சென்றதாகவும் மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளனர்.


Next Story