கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு ஏலம்


கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரே நாளில் 500 ரூபாய் உயர்ந்து கனகாம்பரம் பூ கிலோ ஒன்று ரூ.1,000-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரே நாளில் 500 ரூபாய் உயர்ந்து கனகாம்பரம் பூ கிலோ ஒன்று ரூ.1,000-க்கு விற்பனை ஆனது.

பூக்கள் ஏலம்

சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு 3 டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ரூ.1,000

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.375-க்கும், செண்டுமல்லி ரூ.52-க்கும், பட்டுப்பூ ரூ.46-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் கனகாம்பரம் பூ கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.500 உயர்ந்து கனகாம்பரம் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

போட்டி போட்டு...

இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'மழை காரணமாக செடியில் இருந்து கனகாம்பரம் அதிக அளவில் உதிர்ந்துவிட்டது.

இதனால் மார்க்கெட்டுக்கு கனகாம்பரம் பூ வரத்து குறைந்தது. அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வியாபாரிகளுக்கு கனகாம்பரம் பூ அதிகம் தேவைப்பட்டதால் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதன்காரணமாக கனகாம்பரம் பூக்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது,' என்றனர்.


Next Story