மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை  வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்
x

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 310 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பிறகு தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 2021-22-ஆம் ஆண்டிற்கான அகவை முதிர்ந்த 6 தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4,000- வீதம் உதவித்தொகைக்கான அரசாணைகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

மேலும்பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு தொழில் தொடங்க ரூ.50,000க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, சப்-கலெக்டர் (பயிற்சி) அர்பித்ஜெயின், காஞ்சீபுரம் மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பொ.பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story