கண்மாயில் மீன்பிடி திருவிழா


கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கொன்னைப்பட்டி கொன்னைக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் ஒன்றுகூடினர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் கண்மாய் கரையில் உள்ள மடையில் வெள்ளை துண்டை வீசிய பின்பு கிராம மக்கள் மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் பொதுமக்கள் ஊத்தா, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை பயன்படுத்தி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, பொட்லா, ரோகு, விரால், அயிரை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. மீன்களை பிடித்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் உற்சாகமாக அதனை வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


Next Story