கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது


கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
x

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் சபரிமலை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

சுற்றுலா தலம்

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சனிக்கிழமையான நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு நின்று சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

சாமி தரிசனம்

தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று மண்டபத்தை பார்வையிட்டனர்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கன்னியாகுமரியில் சீசன் களை கட்டியுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலை, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அனைத்து இடங்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story