காரைக்குடி-மயிலாடுதுறை விரைவு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்


காரைக்குடி-மயிலாடுதுறை விரைவு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்
x

காரைக்குடி-மயிலாடுதுறை விரைவு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்

தஞ்சாவூர்

காரைக்குடி-மயிலாடுதுறை விைரவு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நல சங்கம் வலியுறுத்தியது.

ரெயில் பயணிகள் நல சங்க கூட்டம்

பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தம் வரவேற்றார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

கூட்டத்தில், திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி ரெயில் மார்க்கத்தில் புதிதாக இயங்கவிருக்கும் தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பாக வரவேற்பு அளிப்பது.

நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும்

ரெயில்வே நிர்வாகம் இயக்க திட்டமிடப்பட்டுள்ள பகல் நேர சோழன் அதி விரைவு ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு ெரயில், ராமேஸ்வரம்- செகந்திரபாத் விரைவு ரெயில், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி விரைவு ரெயில் ஆகிய விரைவு ரெயில்களை விரைவில் நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும்.

சிறப்பாக செயல்பட்டு வரும் பட்டுக்கோட்டை ரெயில் நிலைய சரக்கு முனையத்திற்கு பாராட்டுகளும், சரக்கு முனையம் அமைய விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால், முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர் ஹரிகுமார், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்த பின் ரெயில் நிலைய வளாகம் முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பூங்காக்கள் அமைக்கவும், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் லட்சுமி காந்தன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story