காரிமங்கலம் அருகேஅரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


காரிமங்கலம் அருகேஅரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 23 March 2023 7:00 PM GMT (Updated: 23 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மொட்டலூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 1.25 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்ததுடன் நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் பலமுறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் நேற்று தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய் துறையினர் போலீசார் பாதுகாப்புடன் கம்பி வேலியை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் பீமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story