மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் முகாம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலை விபத்தில் படுகாயம் அடைந்த உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை ஆர்.டி.ஓ. வழங்கினார்.


Next Story