பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
துடியலூர்
கோவை அருகே தடாகத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அங்கு உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதை அறிந்த மாணவியின் தாய், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்து உள்ளார்.
இந்த நிலையில், ஆனந்த், திருமணம் ஆசைகாட்டி மாணவியை தேனிக்கு கடத்தி சென்று தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். அப்போது ஆனந்த் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் மாணவியை கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதையறிந்த ஆனந்தின் சகோதரர், மாணவி மற்றும் ஆனந்தை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
இதையடுத்து மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.






