பள்ளி மாணவி கடத்தல்

பள்ளி மாணவி கடத்தியது தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் அருண்குமார் (வயது 20). இவர் கூரியர் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே பனங்குப்பத்தைச்சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவியை கடத்திச்சென்று விட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற அருண்குமாரையும் தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





