கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்... செப்டம்பரில் திறப்பு


கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்... செப்டம்பரில் திறப்பு
x

செப்டம்பர் 2வது வாரத்தில் பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் 2,000 பேருந்துகள் வரை வந்து செல்லும் வகையிலும், 270 காா்கள் , 3,500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையிலும் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையில் தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது, 99 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ள நிலையில் செப்டம்பர் 2வது வாரத்தில் பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




Next Story