மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
x

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.

கரூர்

மாயனூர் அருகே உள்ள சித்தலவாயை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 65). கூலி தொழிலாளியான இவர், கரூருக்கு சம்பவத்தன்று ேவலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் சித்தலவாய் வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே மகிளிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் மணிகண்டன் (26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நந்தகுமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நந்தகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story