திண்டிவனத்தில் கார் டிரைவருக்கு கத்தி வெட்டு

திண்டிவனத்தில் கார் டிரைவரை கத்தியால் வெட்டியவரை போலீசாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம்
திண்டிவனம்,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கொடியாலம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் குமார் (வயது 42). கார் டிரைவர். இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜா (46) என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த குமாரை ராஜா தகாத வார்த்தைகளால் திட்டி, பேனா கத்தியால் அவரை வெட்டி உள்ளார்.
இதில் காயமடைந்த குமார் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறுித்த புகாரின் பேரில் ராஜா மீது திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.
Related Tags :
Next Story






