பழனியில் 2 வாலிபருக்கு அரிவாள் வெட்டு


பழனியில் 2 வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 1 May 2023 9:00 PM GMT (Updated: 1 May 2023 9:00 PM GMT)

பழனியில் 2 வாலிபர்களை அரிவாளால் வெட்டியதாக சிறுவன் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பழனி காமராஜ் நகரை சேர்ந்தவர் சாலமன் (வயது 21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரான மாரிமுத்துடன் (21), அதே பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அப்போது எதிர் தரப்பினர் சாலமோன், மாரிமுத்து ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சாலமோன், மாரிமுத்துவை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் அரிவாள் வெட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story