அழகு மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் குடமுழுக்கு


அழகு மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் குடமுழுக்கு
x

தலைஞாயிறு அழகு மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறில் உள்ள அழகு மாரியம்மன், செல்வ விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், பூர்ணாகுதி, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் அழகு மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story