கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணை


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஊட்டி கோர்ட்டில் இன்று விசாரணை
x

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டி கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வாகன விபத்தில் இறந்த கனகராஜ் செல்போன் உரையாடல் பெற கூடுதல் கால அவகாசம் கேட்க்கப்பட்டதால் ஒரு மாதம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தனிப்படை போலீசார் யார் யாரிடம் விசாரணை நடத்தினார்கள், கனகராஜ் மற்றும் சயான் வாகன விபத்து குறித்த விசாரணை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் ,தீபு உள்ளட்ட 10 பேரும் ஆஜராகவுள்ளனர்.


Next Story