கோடியக்கரையில் கடல் உள்வாங்கியது


கோடியக்கரையில் கடல் உள்வாங்கியது
x

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கோடியக்கரையில் கடல் உள்வாங்கியது

நாகப்பட்டினம்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நேற்று மதியம் திடீரென கடல் உள்வாங்கியது. 200 அடி தூரம் கடல் நீர் உள்ளே சென்றதால் சேறும், சகதியுமாக காணப்பட்டது. கோடியக்கரை பகுதியில் காலை முதல் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story