கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை


கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை
x

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கொத்தனாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்

கடலூர்,

நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் சத்தியராஜ் (வயது 30). கொத்தனார். இவர் அதே பகுதியை சேர்ந்த காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். அப்போது அவரது வீட்டுக்கு கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை எடுக்க வருவது வழக்கம். அப்படி வந்த போது, காண்டிராக்டரின் 15 வயது மகளான 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் சத்தியராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி உள்ளார். இந்த விவகாரம் காண்டிராக்டருக்கு தெரிய வந்தது. அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து சத்தியராஜ் அந்த மாணவியை 25.8.2020 அன்று உறையூரில் உள்ள அவரது நண்பர் வீட்டுக்கு கடத்தி சென்றுள்ளார்.

10 ஆண்டு சிறை

அங்கு அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீசில் சிறுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் சத்தியராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இழப்பீடு

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக நலத்துறையின் கீழ் உள்ள நிதியில் ரூ.1 லட்சம் இழப்பீடாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Related Tags :
Next Story