ஆக்கி போட்டியில் கோவில்பட்டி கல்லூரி அணி சாம்பியன்


ஆக்கி போட்டியில் கோவில்பட்டி கல்லூரி அணி சாம்பியன்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:46 PM GMT)

கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டியில் கோவில்பட்டி கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆக்கிப்போட்டி நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 15 கல்லூரிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும் மோதின. இதில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியும், கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி அணியும் மோதின. இதில் கே.ஆர். கல்லூரி அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் மற்றும் இயக்குனர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மதிவண்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், போட்டி அமைப்பாளர் கந்தசாமி, உடற்கல்வி இயக்குனர்கள் ராம்குமார், சிவராஜ், சிவநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story