கோவில்பட்டி யூனியன் கூட்டம்


கோவில்பட்டி யூனியன் கூட்டம்
x

கோவில்பட்டி யூனியன் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டரங்கில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் யூனியன் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன், மேலாளர் முத்துப்பாண்டி, என்ஜினீயர் சங்கர சுப்பிரமணியன், துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 42 தீர்மானங்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டன. அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் ஆணையாளர்கள், யூனியன் முன்னாள் துணை தலைவர் சுப்புராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்தனர்.

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் நிர்மலா தலைமையில் அனைத்து துறை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழியை எடுத்தனர்.


Next Story