கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் வேதனை


கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் வேதனை
x

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

சென்னை,

சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து, தினசரி சுமார் ஆயிரத்து 100 டன் தக்காளி வருவது வழக்கம். இந்நிலையில், தக்காளி தற்போது கூடுதலாக, ஆயிரத்து 400 டன் முதல் ஆயிரத்து 500 டன்கள் வந்துள்ளன.

தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை மேலும் சரியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story