கிருஷ்ண ஜெயந்தி விழா


கிருஷ்ண ஜெயந்தி விழா
x

சங்கரன்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. சங்க தலைவர் நயினார் தலைமை தாங்கினார். சங்க மேலாளர் அனுசுயா முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சங்க காசாளர் சங்கர், தலைமை எழுத்தர் பசுபதி, கண்காணிப்பாளர் அய்யப்பன், கூடுதல் கண்காணிப்பாளர் திருமலைக்குமார், உதவியாளர் பொன்னுகுட்டி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story