சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு


சதுரங்க போட்டியில்  மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
x

சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெ.தருண்யா கலந்து கொண்டு விளையாடி 2-ம் இடம் பிடித்தார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட உள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்த மாணவி தருண்யாவை அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது, ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.


Next Story