குளமங்கலம் அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா

குளமங்கலம் அய்யனார் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது.
கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. விழாவில் பிரமாண்ட குதிரை சிலைக்கு 2,850 காகிதப்பூ மாலைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இந்தநிலையில், அருேக உள்ள பெரிய குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நேற்று அதிகாலை சுவாமிகள் அலங்காரத்துடன் அமர வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் தெப்பம் இழுக்கப்பட்டது. இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





